6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! ஓய்வு பெற்ற அரசு பஸ் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை..! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வ.கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் மணி (82). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 6 வயதுடைய சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் மணியை கைது செய்தனர்.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் மணியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 years in prison for the retired government bus driver who sexually harassed a 6 year old girl in Perambalur


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->