#திண்டுக்கல் | 10 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.! கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை.! நீதிமன்றம் அதிரடி - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமராஜ் (59). இவர் 10 வயதுடைய சிறுமியை கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் ராமராஜை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராமராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years in prison for a laborer who raped 10 year old girl in Dindigul


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->