செங்கல்பட்டு || பாலாற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..! - Seithipunal
Seithipunal


பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமம் வணிகர் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் (16). அவர் அங்குள்ள டூட்டோரியல் மையத்தில் சேர்ந்து படித்து வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (17) என்பவரும் அங்குள்ள பாலாற்றுக்கு குளிக்க சென்றனர். அங்கு அவர்கள் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆழத்திற்கு சென்றனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் அவர்களை தேடி சென்றனர். 2 மாணவர்களின் உடல்  மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 Youths Drowns in To water


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->