கட்டுப்பாட்டை இழந்த கார்.. மரத்தில் மோதிய விபத்தில் 2 பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் மருத்துவர் உள்ளிட்ட பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மருத்துவரான ஹரிஷ்வர்மம் என்பது தனது தாயாருடன் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பழவேலி என்ற பகுதியில் அவர்களை கார் ஒன்று முந்த முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது சாலை ஓரமாக செல்ல முயன்ற மகேந்திர கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் புறத்தில் இருந்த மரத்தின் மீது மிக வேகமாக மோதி உள்ளது. இந்த விபத்தில் மகேந்திரா காரில் பயணித்த மருத்துவர் உட்பட இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 tragically killed in car crash into tree that lost control


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->