+2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


+2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் நித்திஷ் (17) அங்குள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு அறைக்கு சென்று படிக்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கபடதாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் கதவை திறந்து உள்லே சென்று பார்த்த போது அவர் தூக்கில் பிணமாக தொங்கிகொண்டிருந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

 

104 

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

+2 Student Commits Suicide In Dharmapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->