கும்பகோணம்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த இரண்டு பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவருக்கு மேலக்காவிரி பகுதியை சேர்ந்த முருகன்(55) மற்றும் செல்வம்(65) ஆகிய இரண்டு பேர் அண்மைக்காலமாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இவர்கள் இரண்டு பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்பு போலீசார், அவர்கள் இரண்டு பேரையும் கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 people arrested for sexually harassing 8 year old girl in Kumbakonam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->