பட்டுக்கோட்டை அருகே பரிதாபம்.! கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 விவசாயிகள் பலி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளிகளான நடேசன் (65) மற்றும் முத்துசாமி (63) ஆகிய இரண்டு பேரும் இன்று காலை அதே பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகே சாமிக்கண்ணு என்பவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடேசன் மற்றும் முத்துசாமி மீது மோதியது. பின்பு அருகில் இருந்த பள்ளத்துக்குள் புகுந்து நின்றது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த நடேசன் மற்றும் முத்துசாமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 farmer killed in motorcycle car collision in Thanjavur pattukottai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->