வயிற்றுவலியில் துடித்த சிறுமி.! மருத்துவமனையில் பரிசோதித்த போது பேரதிர்ச்சி.!
17 years girl rapped by her relative
ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவை சார்ந்த சந்திரசேகர் என்பவரின் மகனான இருபத்தாறு வயது மதிக்கத்தக்க அருண் ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தன் வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து உள்ளார். அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த உமா என்ற 13 வயது சிறுமி இடம் கல்யாணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பி பெண்ணின் அம்மாவும் சம்மதித்து உள்ளார். சிறுமியின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட அருண் பலமுறை அவருடன் தவறான முறையில் நடந்து கொண்டு இருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது பரிசோதனையில் சிறுமி உமா 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர் இதுபற்றி சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது அருண் தன்னிடம் ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி உமா கூறியுள்ளார்
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளைஞரைச் அருண் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமி அம்மாவை 9 மாத காலமாக தொடர்ந்து இளைஞர் அருண் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது இதனை அடுத்து இளைஞர் அருணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
17 years girl rapped by her relative