6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - 16 வயது சிறுவன் போக்சோவில் கைது - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர் தனது வீட்டின் அருகே பெற்றோருடன் வசித்து வரும் 6 வயதுடைய சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதையறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குன்னம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு போலீசார் சிறுவனை திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியின் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 year old boy arrested for sexually harassing 6 year old girl in Perambalur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->