இலங்கை கடற்படை அட்டுழியம்.. தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. கொந்தளிக்கும் நாகை மீனவர்கள்! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படைகளில் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவ்வாறு சென்ற இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் பயணம் செய்த இரண்டு விசைப்படைகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த நிலையில் கைது செய்யப்பட்ட 16 பேரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு படகுகளை விடுவிப்பதாக இலங்கை நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகை மாவட்ட மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 Tamil Nadu fishermen arrested by Sri Lanka Navy


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->