#BREAKING : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக.. தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுள்ளனர்.

ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

அதேபோல் தலைமன்னார் அருகே மற்றொரு விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மொத்தம் 16 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 rameshwaram fisherman arrested by srilanka Coast guard


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->