அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த சிறுவன் பலி.. நாகை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், பண்டாரவடையை சேர்ந்தவர்கள் கஜேந்திரன், சங்கீதா  தம்பதியினர். இவர்களுக்கு ரகுராமன்  என்ற மகன் இருக்கிறான். ரகுராமன் அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது சிறுவன் சிறுநீர்கழிக்க வெளியே சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் அவன் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அவனை தேடி சென்றனர்.

அப்போது ரகுமான் அறுந்து கிடந்ததை மிதித்து மயங்கிகிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 year boy Dead in Nagai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->