இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை.!
15 rameshwaram fisherman released in srilanka
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தனர். மேலும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இலங்கை வவுனியா சிறையில் உள்ள 15 தமிழக மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
English Summary
15 rameshwaram fisherman released in srilanka