இன்ஸ்டாகிராமில் பழகிய நபருடன் அரைகுறை ஆடையுடன் வீடியோ காலில் காதல் லீலை: வாலிபருடன் லாட்ஜில் தங்கிய 14 வயது சிறுமி..! - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 08-ஆம் வகுப்பு மாணவி தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இருந்து வருகிறார். குறித்த சிறுமி இன்ஸ்டாகிராம் மற்றும் ஏனைய சமூக வலைத்தளத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். 

அதிலும் தெரிந்த நண்பர்கள் மற்றும் தெரியாத நபர்களுடன் அதிக நேரம் சாட்டிங் செய்து  உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாவில் பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது வாலிபர் சூர்யா என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இதன் பின்னர் அடிக்கடி இரவு நேரங்களில் நீண்ட நேரம் வாலிபர் சூர்யாவுடன் சிறுமி இன்ஸ்டாகிராமில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதுபோன்ற நேரங்களில் வாலிபர் சூர்யா மாணவியுடன் ஆபாசமாக பேசி வந்துள்ளதோடு, இருவரும் வீடியோ காலில் அரைகுறை ஆடையுடன் (அரை நிர்வாணமாக) பேசி வந்திருந்துள்ளனர். இப்படி அடிக்கடி மாணவியை வீடியோ காலில் பார்த்து ரசித்த சூர்யாவுக்கு அந்த சிறுமியை நேரில் பார்க்க ஆசை ஏற்பட்டுள்ளது. அவரைப் பார்ப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலமாக சென்னை ஆவடிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஆவடிக்கு வந்த சூர்யா சூர்யா மாணவியின் வீட்டுக்குச் சென்று வா வெளியில் செல்லலாம் என அழைத்துள்ளார். அப்போது மாணவியின் பாட்டி அவர்களை தடுத்து நிறுத்திய போது அவரை கீழே தள்ளி விட்டுவிட்டு மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். 

இதனை தொடர்ந்து, ஆவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தாம்பரத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் மாணவி தங்கி இருந்த அறையில் அதிரடியாக புகுந்தனர். அப்போது வாலிபர் சூர்யாவுடன் மாணவி ஒன்றாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மாணவியை மீட்ட போலீசார், பின்னர் பொள்ளாச்சி வாலிபர் சூர்யாவை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடந்த விசாரணையில் 02 மணி நேரத்துக்கும் மேலாக மாணவியிடம் வாலிபர் சூர்யா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 year old girl stays at lodge with boy she met on Instagram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->