திருநெல்வேலி: 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மூலக்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் ஹரினி(17) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சரஸ்வதி பூஜையையொட்டி குடும்பத்தினர் அனைவரும் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதையடுத்து ஹரிணி தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு மாடிக்கு சென்று உள்ளார். சிறிது நேரம் கழித்து அவரை சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் மாடிக்கு சென்ற போது, கதவு பூட்டிக் கிடந்ததால் அங்குள்ள ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

அப்பொழுது ஹரிணி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் ஹரினியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சேரன்மகாதேவி போலீசார், வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th class student suicide in Tirunelveli


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->