#சற்றுமுன் || 12 ஆம் வகுப்பு வினாத்தாள் கசிவு., அதிர்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


இரண்டாம் திருப்புதல் தேர்வில், நாளை நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் கசிந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கு இடமில்லை என்று ஏற்கனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், தற்போது 12ஆம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே முதல்கட்ட திருப்புதல் தேர்வில் அனைத்து படங்களின் வினாத்தாள்களும் முன்கூட்டியே கசிந்த நிலையில், தற்போது மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்களும் கசிந்துள்ளது. 

நாளை நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு தயாரிக்கப்பட்டிருந்த இரண்டு வகையான வினாத்தாள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

மார்ச் 28ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் திருப்புதல் தேர்வு, வரும் 5-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 th maths question paper leek 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->