உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்: கைகள் இன்றி தங்கம் வென்ற இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி! - Seithipunal
Seithipunal


தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வரும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை 18 வயது ஷீத்தல் தேவி வரலாறு படைத்துள்ளார்.இதில் இன்று அதாவது சனிக்கிழமை பெண்களுக்கான காம்பவுண்டு ஒற்றையர் பிரிவில், உலக நம்பர் 1 சாம்பியன் துருக்கி வீராங்கனி ஓஸ்நுர் குரே கிர்டியை 146–143 என்ற அற்புதமான கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் தேவி தங்கம் வென்றார்.

இந்நிகழ்வில், உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் கைகள் இல்லாமல் தங்கம் வென்ற முதல் வீராங்கனையாக ஷீத்தல் தேவி வரலாறு படைத்துள்ளார்.

இதற்கு முன்பு நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்டு இரட்டையர் பிரிவு அரையிறுதியில், ஷீத்தல் தேவி தனது பங்காளி சரிதா ஜோடி உடன் சேர்ந்து பிரிட்டனின் நம்பர்-1 ஜோடி போபே பைன்-ஜெசிக்கா ஜோடி கூட்டணி மீது 152 -150 என்ற அதிரடி கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியுள்ளனர்.

மேலும், போகோமெலியா (phocomelia) என்ற அரிய பிறவியல் காரணமாக கைகள் இல்லாமல் பிறந்த ஷீத்தல், காலால் வில்லை உயர்த்தி, தோள்பட்டை மற்றும் தாடையின் வலிமையை பயன்படுத்தி வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, அம்பு எய்வதில் சிறந்த நிபுணத்துவத்தை பெற்றவர்.இப்படி, இந்தியாவின் இளம் வீராங்கனை பாரா விளையாட்டில் உலக சாதனை நிலைமையை உருவாக்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Para Archery Championship Indian athlete Sheetal Devi wins gold without arms


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->