உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி.. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்று சாதனை.! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளனர்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 50 மீட்டர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்-ஆஷி சோக்சே இணை 16-12 என்ற புள்ளி கணக்கில் உக்ரைனின் செர்ஹி குலிஷ்-டாரியா டைகோவா ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

 இந்த போட்டியில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியா 2 தங்கம், 3 வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் தென்கொரியா உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup sniper competition India wins gold in mixed doubles category


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->