கரோனா நிதி உதவியாக கோடிகளை அள்ளிக் கொடுத்த இந்திய கேப்டன் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா!!
virat Kohli and Anushka Sharma fund for corono
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் மேல்நிலை மற்றும் இடைநிலை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் இந்திய நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி வரை மக்கள் அனைவரும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரபல தடகள வீரரான ஹிமாதாஸ் கோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவருடைய ஒரு மாத சம்பளத்தை நிதியாக வழங்கினார். அவரைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இணைந்து 3 கோடி ரூபாய் நிதி உதவியாக அளித்திருப்பதாக ட்விட்டர் பதிவில் வெளியாகி வருகிறது. இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 51 லட்சம் நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
virat Kohli and Anushka Sharma fund for corono