இந்தியாவிற்கு பெருமை: உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2025: தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் வென்றுள்ளார்..! - Seithipunal
Seithipunal


உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2025 போட்டி நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்டஸட்டோரோவை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்த இந்த போட்டியில், பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி சாம்பியனாகியுள்ளார். பல முன்னணி வீரர்களை தோற்கடித்த பிரக்ஞானந்தா இறுதியில் நோடிர்பெக் அப்டஸட்டோரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி இந்திய செஸ் விளையாட்டுக்கு ஒரு பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம், பிரக்ஞானந்தா உலகின் முன்னணி செஸ் வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட்டுள்ளார். உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu player Praggnanandha Champion has won the Uzbekistan Chess Cup 2025 Master category


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->