IPL தொடர் 2024 - டாஸ் வென்றது RCB அணி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன், இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், டைகர் ஷெஃராப், ஏஆர் ரஹ்மான், சோனு நிகம் மற்றும் பின்னணி பாடகர் மோகித் சவுகான், நீதி உள்ளிட்டோரின் நடன மற்றும் இசை நிகழ்ச்சி என்று கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றிய தோனியின் கேப்டன்ஷிப் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 

இதையடுத்து இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது, அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீசவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rcb won toss in ipl 2024


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->