RCB Vs KKR போட்டி ஒத்திவைப்பு.. பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி அடைந்தது. 

இன்றைய (03/05/2021) தினத்தில் பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்கும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான மோதல் போட்டி நடைபெறுவதாக அட்டவணைகள் தயார் செய்யப்பட்டு இருந்தது. 

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களான வருண் மற்றும் சந்தீப் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆர்.சி.பி Vs கே.கே.ஆர் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்கும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட இரண்டு வீரர்களும் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RCB Vs KKR 3 May 2021 Match Post pended due to KKR Players Test Positive Corona


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->