தோனி ஓய்வு குறித்த மௌனத்தை கலைத்து முடிவை அறிவித்தார் ரவி சாஸ்திரி.! - Seithipunal
Seithipunal


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை, மஹேந்திரசிங் தோனி விரைவில் அறிவிக்க உள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வு தொடர்பாக தான் சமீபத்தில் தோனியுடன் பேசியதாக கூறிய ரவி சாஸ்திரி . மேலும் ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் போட்டி என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி திறம்பட விளையாடியுள்ளார் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த வயதில் தோனி டி20 கிரிக்கெட்டை மட்டுமே விளையாட விரும்ப வேண்டும். இருந்தாலும் வர உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடும்போது, அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். தோனியை பற்றி ஒரு விஷயம் எனக்கு நன்றாக தெரியும். அது என்னவென்றால் அவராகவே அணிக்கு திரும்ப நினைக்கமாட்டார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி தோனி அசத்தி விட்டால் டி20 போட்டிகளில் அவரை நிச்சயம்  அணியின் உள்ளே இழுக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த சமயத்தில் டி20 அணித்தேர்வுக்கான போட்டியில் தோனி இணைவார் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ravi shastri says about dhoni retirement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->