பாராலிம்பிக் : தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இன்று., உச்சகட்ட எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்.!
mariyappan thangavelu today in Paralympic
பாரா ஒலிம்பிக்கில் இன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மரியப்பன் தங்கவேலு பங்கேற்கிறார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம், 4 வெள்ளி உள்பட 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் இன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மரியப்பன் தங்கவேலு பங்கேற்கிறார். இந்திய வீரர்கள் சரத்குமார், வருண் சிங் ஆகியோரும் இந்த உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதேபோல் இந்திய வீரர் வருண் சிங் வெங்கல பதக்கம் வென்று அசத்தினார்.

எனவே, இன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் மரியப்பன் தங்கவேலு மற்றும் சரத்குமார், வருண் சிங் ஆகியோர் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதால், இந்த போட்டியை காண இந்திய மக்கள் மிகவும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.
English Summary
mariyappan thangavelu today in Paralympic