கொடைக்கானலில் அதிர்ச்சி: சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து போதை காளான் விற்பனை..!
Intoxicating mushroom sales targeting tourists in Kodaikanal
கொடைக்கானல் மேல் மலைப்பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், உள்ளிட்ட பகுதிகளில் போதை காளான் விற்பனை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கொடைக்கானலில் போதை காளான் விற்பனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் கண்காணித்து அதனை விற்போரை கைது செய்தனர். அதன் பின்னர் போதை காளான் பயன்பாடு மற்றும் விற்பனை குறைந்து இருந்தது.
இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கால் உள்ளிட்ட கிராமங்களில் அரசு அனுமதி இல்லாமல் கூடாரம் (டென்ட்) அமைத்து சுற்றுலா பயணிகள் தங்க தொடங்கியுள்ளனர்.
-wsu4q.png)
கடந்த சில மாதங்களாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில வாலிபர்கள், மற்றும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அங்கு அவர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கி வருகின்றனர். இவர்களை குறி வைத்து ஆசாமிகள் போதை காளான்களை விற்பனை செய்கின்றனர்.
இந்தநிலையில் மேல்மலைக்கிராமத்தில் கடந்த 02 தினங்களுக்கு முன்பு சிலர், போதை காளான் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் அவர்கள் போதை காளான் மீது தேனை ஊற்றி சாப்பிடுவது போலவும், பிறரை வாங்கி சாப்பிடும் வகையில் ஆசையை தூண்டும் வகையிலும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் மீண்டும் தலைதூக்கும் போதை காளான் விற்பனையை முற்றிலும் ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
English Summary
Intoxicating mushroom sales targeting tourists in Kodaikanal