சட்டவிரோதமாக ரூ.540 கோடிக்கு போதைப்பொருள் பரிவர்த்தனை: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பண சம்பாதித்துள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சர் கைது..!
Former Punjab minister arrested for illegal drug transaction worth Rs 540 crore
சட்ட விரோத போதைப்பொருள் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் பிக்ராம் சிங் மஜிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிரோண்மனி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மைத்துனரான பிக்ரம் சிங் மஜிதா, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். இவர் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார், அமிர்தசரசில் உள்ள அவரது வீடு மற்றும் சண்டிகரில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில், ரூ.540 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-l43gl.png)
அத்துடன், பிக்ராம் சிங் மஜிதா மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அதிகரித்துள்ளன. ஆனால், அவற்றுக்கு முறையான கணக்கு ஏதும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், போதைப்பொருள் விற்பனை வாயிலாக ரூ.540 கோடி வரை சட்டவிரோதமாக அவர் சம்பாதித்துள்ளார். மஜிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.161 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
-usrxc.png)
அத்துடன், சந்தேகத்திற்கு உரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.141 கோடியை அவர் பெற்றுள்ளதாகவும், எப்படி பணம் கிடைத்தது என்பதை கணக்கு காட்டாமல் ரூ.236 கோடியை டெபாசிட் செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
அவர் அமைச்சராக இருந்து கொண்டு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். அவரது வீட்டில் நடந்த சோதனையில் 30 மொபைல் போன்கள், ஐந்து லேப்டாப்கள், 03 ஐ பேட்கள், 02 கணினிகள், பல டைரிகள், சொத்து சார்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Former Punjab minister arrested for illegal drug transaction worth Rs 540 crore