ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 972 பேரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய PFI: நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அறிக்கை..! - Seithipunal
Seithipunal


பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்  ஓய்வுபெற்ற நீதிபதி உட்பட, 972 பேரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.

கடந்த 202இல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவராக இருந்த சீனிவாசன் என்பவரை, ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில், பி.எப்.ஐ., அமைப்பினர் அவரை கொலை செய்தது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பில் பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த, 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஜாமின் வழங்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணையின் போது, அவர்களுக்கு ஜாமின் வழங்க என்.ஐ.ஏ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன், அந்த அமைப்பினரின் செயல்திட்டங்களை விளக்கும் வகையில் அறிக்கை ஒன்றையும் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு சமர்ப்பித்தது.

அதில், பி.எப்.ஐ., அமைப்பினர், செய்தியாளர்கள் குழு, ஆயுத பயிற்சி குழு, சேவை குழு என மூன்று பிரிவுகளாக இயங்கி வருகின்றனர். இதில் செய்தியாளர்கள் குழு, சமூகத்தில் பிரபலமானவர்களின் பட்டியலை சேகரித்து, ஒவ்வொரு மாவட்ட தலைமைக்கும் அனுப்பும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன், அதில் சேகரிக்கப்படும் நபர்களின் அன்றாட பணிகள், வயது, புகைப்படம் உள்ளிட்டவை அடங்கியுள்ளதாகவும், குறிப்பாக, ஹிந்து மத தலைவர்கள் பற்றிய விபரங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பெறப்படுகின்ற தகவல்கள் அனைத்தும் மாநில தலைமைக்கு பகிரப்படுவதோடு, தனிப்பட்ட நபர்கள் மீது தாக்குதல் நடத்த, அந்த அமைப்பின் பயங்கரவாத குழு பயன்படுத்தும் என்று அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவராக இருந்த சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் வாயிலாக, பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆதாரங்களின் படி,  ஓய்வுபெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி உட்பட, 972 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்.ஐ.ஏ., அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக கூறி, இந்தியாவில் பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் இயங்க, ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து 2022 செப்டம்பரில் மத்திய அரசு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PFI hatched a conspiracy to kill 972 people, including a retired judge


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->