நான்காவது போட்டி ஆடுகளம்! இந்தியாவிற்கு புள்ளிகள் வழங்க கூடாது! போர்க்கொடி தூக்கிய இங்கிலாந்து வீரர்!
mandy panesar about 4th test pitch
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியிலும் 2-வது டெஸ்ட் போட்டி போலவே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவடைந்ததால் அகமதாபாத் ஆடுகளம் குறித்து விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பனேசர், 3-வது போட்டிக்கான ஆடுகளம் போன்று 4-வது போட்டிக்கும் அமைக்கப்பட்டால், ஐசிசி இந்திய அணிக்கு புள்ளிகள் வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பனேசர் கூறுகையில் ‘அடுத்த போட்டிக்கான ஆடுகளமும் அப்படியே அமைக்கப்பட்டால், அதன்பின் ஐசிசி புள்ளிகளை வழங்கக் கூடாது. டர்னிங் பிட்ச் தயார் செய்தாலும் போட்டி 3 அல்லது மூன்றரை நாட்களாகவது செல்ல வேண்டும். இந்தியா அதுபோன்று ஆடுகளம் தயார் செய்யும்போது, போட்டி மூன்று நாட்களுக்காவது செல்ல வேண்டும்’’ என்றார்.
English Summary
mandy panesar about 4th test pitch