சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு இது தான் காரணம்.. ஜடேஜா அதிரடி.!!
jadeja press meet for PBKS Win the match
ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
இதையடுத்து அடியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அம்பத்தி ராயுடு 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, போட்டியை சிறப்பாக தான் ஆரம்பித்தோம். 10- 15 ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்துதான் பெரிய தவறு.
175 ரன்னுக்குள் பஞ்சாப்பை கட்டுப்படுத்தி இருந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். தோல்விக்கு இது தான் முக்கிய காரணம். பவர் பிளேவில் நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிக ரன்களை சேர்த்து இருக்க வேண்டும். சிறப்பாக கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
jadeja press meet for PBKS Win the match