ஐபிஎல் 20-20.,யில் 200: கொண்டாட்டத்தில் சென்னை சூப் கிங்க்ஸ் அணி.!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் அதிகமுறை இறுதி சுற்றுக்கு சென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகும். ஒரு பலமான அணியாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 200-வது டி20 ஆட்டத்தை விளையாடவுள்ளது.

ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும் பிளேஆஃப்புக்கு சுற்றுக்கு தகுதிபெற்று உள்ள ஒரே அணி என்ற பெருமை இந்த ஐபிஎல் தொடரை காணாமல் போக போகிறது. ஆம், இந்த வருட ஐபிஎல் போட்டி சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகராக இன்னொரு அணியைக் கூற முடியாது., மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த தொடரில் இதுவரை சென்னை அணி விளையாடிய 10 ஆட்டங்களில் 7-ல் தோல்வியடைந்துள்ளது. எனினும் மீதமுள்ள 4 ஆட்டங்களில் விளையாடினால் பிளேஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே பல பரிட்சை நடக்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் 200-வது டி20 ஆட்டமாகும். இதுவரை விளையாடிய 199 ஆட்டங்களில் 118-ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ipl 2020 csk 200th match today


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->