நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது . அதில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் நேற்று, கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது .கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 29 ரன்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஆனால், மறுமுனையில் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து சரிந்தனர். குறிப்பாக அக்சர் படேலின் பந்துகளை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். டேரில் மிட்செல் 5 ரன்களிலும், மார்க் சாம்பன், பிலிப்ஸ் இருவரும் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

நியூசிலாந்து அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  அரை சதம் அடித்த மார்டின் கப்தில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தனர். இதனால் நியூஸிலாந்து அணி 17.52 ஓவர்களில் 117 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி இதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india win 3rd t20 match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->