ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை புரட்டியெடுத்த மிட்செல் மார்ஷ்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 58வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. இதில் அஸ்வின் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து, சிறப்பாக விளையாடினார். தேவ்தத் படிக்கல் 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். அடுத்து இறங்கிய வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. டெல்லி அணியில் சார்பில் நோக்கியா, சகாரியா, மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து, 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் பரத் டக் அவுட் ஆகி வெளியேறினார். டேவிட் வார்னர் உடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடினார். இருவரும் பந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். 

மிட்செல் மார்ஷ் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து, டேவிட் வார்னர் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் டெல்லி அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 1641 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது, ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DC vs RR Match DC Win


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->