கொல்கத்தா அணியை துவம்சம் செய்து வெற்றி பெற்ற டெல்லி அணி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசனில் 41 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரிங்கு சிங்  23 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்களையும் எடுத்தார். 

அதன்பிறகு 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்க வீரர் டக் அவுட் ஆகி வெளியேறினார். டேவிட் வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லதித் யாதவ் 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அக்சர் படேல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பாவெல் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 19 ஓவர் முடிவில் டெல்லி அணி 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். டிம் சவுதி மற்றும் ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DC vs KKR Match DC Win


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->