Upstox-க்கு தெரிகிறது.. ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவதில்லை - ஜடேஜா கிண்டல் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி மேலும் இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து இந்த போட்டியின் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை பெற்ற புகைப்படத்தை ஜடேஜா பதிவிட்டு கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில் 'Upstox-க்கு தெரிகிறது.. ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவதில்லை' என தெரிவித்துள்ளார். இதில் சென்னை அணியின் பேட்டிங்கின் தோனி பேட்டிங் ஆட வர வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் கத்தி கூச்சலிட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK player jadeja tweet about upstox most valuable player


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->