கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக காரணம் இதுதான்..அணி நிர்வாகம் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்எஸ் தோனி திடீரென விலகினார். இதனை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜடேஜாவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியாதாவது,

மகேந்திர சிங் தோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார் தொடர்ந்து அப்படியே இருப்பார். கேப்டன் பொறுப்பை ஜடேஜாவின் ஒப்படைக்க இது சரியான நேரம் என அவர் உணர்ந்ததால் அதை செய்துள்ளார். இந்த முடிவை எடுத்தது அவர்தான்.

தோனியின் முடிவு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் கடந்த ஆண்டே விவாதித்துள்ளோம். ஜடேஜாவை அவர் இந்தத் தொடரில் வழிநடத்துவார். அணிக்கும் ஒரு சீனியர் வீரராக இருந்து வழி நடத்துவார்.

ஐபிஎல்-லில் மகேந்திர சிங் தோனியின் கடைசியாக சீசன் ஆக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தொடர்ந்து அவர் விளையாடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK CEO speech about dhoni step down captaincy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->