சென்னை ஏழாவது இடத்திலே நீடிக்க என்ன நடக்க வேண்டும்! வெளியான புதிய கணக்கு!  - Seithipunal
Seithipunal


இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், இரண்டாவது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. 

ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், இரண்டு அணிகளில் வெற்றி பெறக்கூடிய அணி 14 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும். தோல்வியடையும் அணி வெளியேறும். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா அணியில் ரசெல் களமிறங்கியுள்ளார். ராஜஸ்தான் அணியில் மாற்றமில்லை. கொல்கத்தா அணி கேப்டன் மார்கன் அரைசதம் விளாச, கோல்கட்டா அணி 20 ஓவரில் 191 ரன்கள் குவித்தது.

கோல்கட்டா அணிக்கு கேப்டன் இயான் மார்கன் (68*), ராகுல் திரிபாதி (39), சுப்மன் கில் (36), ரசல் (25) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் டிவாட்டியா 3 , தியாகி 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த நிலையில் சென்னை அணி 7 ஆவது இடத்தில் இருக்கிறது. அதே இடத்தில் நீடிக்க கொல்கத்தா அணி இந்த போட்டியில் தோற்க வேண்டும் அல்லது ராஜஸ்தானை 29 ரன்களுக்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அப்போது சென்னை அணி தொடரை 7 ஆவது இடத்தில் முடிக்கும் என கணக்கீடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai position in IPL2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->