சிஎஸ்கே-வின் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத்தியில், மாறாத ஒன்று உங்கள் அன்பு: பத்திரனா உருக்கம்..!
Amidst CSKs ups and downs one thing that hasnt changed is your love and trust says Pathirana
18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 05 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக தடுமாறி, பெருபாலான போட்டிகளில் சொதப்பியது. அதன் காரணமாக ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் 08 புள்ளிகளை மட்டும் பெற்று, கடைசி இடத்தை பிடித்து அதிர்ச்சியளித்து வெளியேறியுள்ளது.
குறிப்பாக சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகிய நிலையில், மீண்டும் கேப்டனாக கேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் கடும் சொத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அணி வீரர் மதிஷ பத்திரன சென்னை அணி பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளதாவது:-
'நாங்கள் எதிர்பார்த்த சீசனாக இது அமையவில்லை. ஆனால், இந்த ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது. அது சென்னை ரசிகர்களின் அன்பும், ஆதரவும். என் மீது நம்பிக்கை வைத்த அணிக்கும், நிர்வாகத்திற்கும், ஒவ்வொரு ஆதரவாளருக்கும் நன்றி. தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன்.'என தெரிவித்துள்ளார்.

English Summary
Amidst CSKs ups and downs one thing that hasnt changed is your love and trust says Pathirana