#JustIn: தனது ஓய்வை அறிவித்த CSK வீரர் அம்பத்தி ராயுடு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு அனைத்து விட கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில்  சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் அம்பத்தி ராயுடு, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து அம்பத்தி ராயுடு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆந்திரா, பிசிசிஐ, ஹைதராபாத், பரோடா மற்றும் விதர்பா கிரிக்கெட் சங்கங்களுக்கு நன்றி. என்னை ஐபிஎல் அணிகளில் சிறப்பாக வெளிப்படுத்த உதவிய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கும் நன்றி. 6 ஐபிஎல் கோப்பைகளை பெற்று எனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்வது பெருமிதத்தை ஏற்படுத்துகிறது."என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambati rayudu announced his retirement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->