மீண்டும் தென்னாரிக்கா அணியின் கேப்டன் ஆகும் 'MR 360' ஏபி டி வில்லியர்ஸ்..? - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதிலிருந்தும் விடைபெற்றார்.

'மிஸ்டர் 360' என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ்-க்கும் அவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு உண்டு. எந்த ஒரு மைதானமாக இருந்தாலும், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்சர் அடிக்கும் திறமை படைத்தவர் இவர்.

இவர் விளையாடிய கால கட்டங்களில் ஏராளமான சாதனைகளை  படைத்துள்ளார். நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த இவர் போட்டிகளில் வர்ணனையாளராக தொடர்ந்தும் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் டி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதாக அறிவித்துள்ளார். இது சிரிக்கட் ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் விளையாடும் 'உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்' தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக விளையாட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AB de Villiers to captain World Legends Championship


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->