தென்காசி சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற சங்கரநாராயணசாமி தபசு காட்சிகள்..!
The aadithapasu Festival was held at sankarankovil temple in Tenkasi today
தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலும் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.
இந்த கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி இந்த திருவிழாவினை தொடர்ந்து, சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் முன்தினம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெற்றது. இன்று காலை 05 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, காலை 09.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 04.15 மணிக்கு மேல் சங்கரநாராயணசாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அத்துடன், மாலை 06 மணிக்கு மேல் சங்கரநாராயணசாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுத்தார். இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழாவையெட்டி தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 11 மணிக்கு சங்கரலிங்கசாமி யானை வாகனத்தில் புறப்பட்டு சென்று இரவு 11.30 மணிக்கு மேல் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
English Summary
The aadithapasu Festival was held at sankarankovil temple in Tenkasi today