திடீர் அதிர்ஷ்டம்.. பண விரயத்தை போக்கி.. வருமானத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு.! - Seithipunal
Seithipunal


ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்யவேண்டிய மிக சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இதனால் கிடைக்கப்பெறும் பலன் மிக மிக பெரிது.

இப்பூஜையை ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து ஒரே நாளில் செய்யவேண்டும். ஒன்பது வாரம் பூஜை செய்ய நினைப்பவர்கள் வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையன்று இப்பூஜையை செய்யலாம்.

அதேபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியன்று இப்பூஜையை செய்யலாம். இப்பூஜையை ஒருவர் மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும். அவரால் முடியாத பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.

வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். பின்பு, பூஜை தடைபடாமல் இருக்க விநாயகரை வணங்கி கொள்ளவும்.

குபேர யந்திர கோலத்தில் உள்ள கட்டத்தை குங்குமத்தாலும், எண்களை அரிசிமாவாலும் எழுதுவது சிறந்தது. திருமகளான லட்சுமியை குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள 'ஸ்ரீ" எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதை வரைந்த பிறகு கட்டங்களின் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நாணயம் வைக்க வேண்டும். நாணயத்தை கட்டத்திலுள்ள எண்களை மறைப்பதுபோல் வைக்கக்கூடாது.

பூஜை செய்வதற்கு உதிரிப்பூக்களை வைத்துக் கொள்ளவும். வரைந்துள்ள பலகையை பூஜையறையில் வைத்து பின்பு அதற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி, பால் அல்லது பாயாசம் சமைத்து படைக்கலாம்.

பூஜையை செய்திட ஒருமுறைக்கு 9 காசுகள் என, 9 தடவைக்குமாக சேர்த்து 81 நாணயங்கள் அவசியம். 1 ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ப காசை பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் 81 காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும்.

பிறகு லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மந்திரங்களை கூறியவாறே சிறிதளவு பூவை எடுத்து நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போட்டு மனதார வழிபட்டு பூஜையை முடித்துக்கொள்ளலாம். குபேர யந்திரத்தில் வைத்த நாணயங்களை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போட்டுவிட வேண்டும்.

இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pray every Friday get money


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->