பௌர்ணமி கிரிவலம் நாளை: பக்தர்களுக்கான உகந்த நேரத்தை அறிவித்த திருவண்ணாமலை கோவில் நிர்வாகம்...! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானின் திருமேனியாக போற்றப்படும் புனித அண்ணாமலை மலை, பக்தர்களின் பேராதரவை நாள்தோறும் பெற்றுவருகிறது.

சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மலைப்பாதையை, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் பக்தி உணர்வுடன் நடைபயணம் செய்து வலம் வந்து தரிசிப்பது தொன்றுதொட்டு நிலைத்து வரும் மரபாகும்.

மாசி மாத பௌர்ணமி நாளை மாலை 6.29 மணிக்கு தொடங்கி, மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 5.52 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த காலப்பகுதி முழுவதும் கிரிவலம் செல்ல மிகவும் சிறப்பான மற்றும் சுப நேரமாகும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமல்லாது, லட்சக்கணக்கானோர் ஆன்மிக உற்சாகத்துடன் திருவண்ணாமலை நோக்கி திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pournami Girivalam tomorrow Tiruvannamalai temple administration announces auspicious time devotees


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->