மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை வரும் 12ம் தேதி திறப்பு.. பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!! - Seithipunal
Seithipunal


மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை, வரும் 12ம் தேதி  திறக்கப்பட உள்ளது.

மாசி மாதம் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகின்ற 12ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 20ஆம் தேதி சாத்தப்பட்டது. 

இந்நிலையில், மாசி மாத பூஜைகள் வருகின்ற 13ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வருகின்ற 12ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவின் முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் பரமேஸ்வரன் நடித்திருப்பார். அன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 

மறுநாள் 13ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை மாசி மாத பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நெய்யபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. 17ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

feb 12 sabarimala iyyappan temple open


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->