சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..! - Seithipunal
Seithipunal


4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.  இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

அதன் படி, ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்ல தடை  விதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார். ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devotees allowed in Sathuragiri Temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->