செல்வ வளமும், செல்வாக்கும் உடையவர்கள் இந்த திதியில் பிறந்தவர்களே...!! - Seithipunal
Seithipunal


திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவு ஆகும். திதி பஞ்சாங்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். 

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில்தான் திதிகள் தோன்றுகின்றன. 

அமாவாசை நாளையும், பூரணை(பௌர்ணமி) நாளையும் அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி ஆகும். 

அமாவாசையை அடுத்துவரும் அஷ்டமியை சுக்கில பட்ச அஷ்டமி என்றும், பூரணையை(பௌர்ணமி) அடுத்துவரும் அஷ்டமியை கிருஷ்ண பட்ச அஷ்டமி என்றும் அழைக்கின்றனர். 

அந்த வகையில், அஷ்டமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 

அஷ்டமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :

வாக்குவன்மை உடையவர்கள். 

புத்திர பாக்கியம் உடையவர்கள். 

செல்வ வளமும், செல்வாக்கும் கொண்டவர்கள். 

மனைவிக்கு கட்டுப்படக்கூடியவர்கள். 

ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்:

அமாவாசை நாளையும், பூரணை(பௌர்ணமி) நாளையும் அடுத்து வரும் ஒன்பதாவது திதி நவமி ஆகும்.

அமாவாசையை அடுத்துவரும் நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பூரணையை(பௌர்ணமி) அடுத்துவரும் நவமியை கிருஷ்ண பட்ச நவமி என்றும் அழைக்கின்றனர்.

அந்த வகையில், நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :

மற்றவர்கள் போற்றும் படி வாழக்கூடியவர்கள்.

திடமான உடலமைப்பை உடையவர்கள்.

மனதில் தைரியம் கொண்டவர்கள்.

எதிர்ப்புகளுக்கு அச்சம் கொள்ளாதவர்கள்.

கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

தமது விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

astami navami thithi gunangal


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->