தினம் தினம் திருநாளே... இன்றைய நாளில் உங்களுக்கான தினப்பலன்கள் இதோ.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தம்பதியர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 

ரிஷபம்:

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். போட்டிகள் நிறைந்த நாள். 

மிதுனம்:

வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள். 

கடகம்:

பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். வாகனப் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள். 

சிம்மம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். அலைச்சல் நிறைந்த நாள். 

கன்னி:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றமான தருணங்கள் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பொறுமை வேண்டிய நாள். 

துலாம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் திருப்பங்கள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள். 

விருச்சிகம்:

கலை சார்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சமூகப் பணிகளில் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதுவிதமான பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள். 

தனுசு:

உறவினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தெளிவான நாள்.

மகரம்:

நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தாயாருடன் தேவையற்ற வீண் வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அமைதியான நாள். 

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் பேச்சுகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். திருப்தியான நாள். 

மீனம்:

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இன்பமான நாள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->