இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அமோகமாக இருக்கும்..இன்றைய (27-03-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் ரீதியான வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் காணப்படும். வரவு மேம்படும் நாள்.

ரிஷபம்

மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் காணப்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறையும். அமைதி வேண்டிய நாள்.

மிதுனம்

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தோற்றப்பொலிவில்  சிறு சிறு மாற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

இழுபறியான சில விஷயங்கள் எதிர்பாராத வகையில் நிறைவுபெறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் லாபம் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி

சக ஊழியர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். கற்பனை சார்ந்த விஷயங்கள் மனதில் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். இன்பம் நிறைந்த நாள்.

துலாம்

ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். கவனம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

வியாபார பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக பணியில் இருந்துவந்த காலதாமதம் குறையும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். சேமிப்பு மேம்படும் நாள்.

தனுசு

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

மகரம்

இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்

நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புரிதல் உண்டாகும் நாள்.

மீனம்

உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எண்ணிய சில பணிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27.03.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->