இன்றைய நாளை இனிமையாக தொடங்க... இன்றைய ராசிப்பலன்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம்  வேண்டும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நம்பிக்கை மேம்படும் நாள். 

ரிஷபம்:

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தன்னம்பிக்கையுடன் எந்தவொரு காரியத்திலும் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும் நாள். 

மிதுனம்:

வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான தருணங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பும், ஆதரவான பலன்களும் உண்டாகும். நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நிறைவான நாள். 

கடகம்:

வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். மனதில் புதுவகையான சிந்தனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். உற்சாகமான நாள். 

சிம்மம்:

வெளிவட்டாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். இழுபறியாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நன்மை நிறைந்த நாள்.  

கன்னி:

வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த  பணிகள் திருப்திகரமாக இருந்தாலும் சில அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.  மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தெளிவு பிறக்கும் நாள். 

துலாம்:

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் நடைபெறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள். 

விருச்சிகம்:

செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சகோதர, சகோதரி வழியில் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள். 

தனுசு:

கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். பிடிவாத குணத்தை விட்டுவிடுவது நல்லது. எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். 

மகரம்:

வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தடைகள் குறையும் நாள். 

கும்பம்:

புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்பார்த்திருந்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். முன்னேற்றம் ஏற்படும் நாள். 

மீனம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->