இந்த நாள் இனிமையாக அமைய... இன்றைய தினப்பலன்கள்..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

பிள்ளைகளின் வழியில் சுபவிரயங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.  வெற்றிகரமான நாள்.

ரிஷபம்:

வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். குடும்பத்தில் தேவையில்லாத சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சாந்தம் வேண்டிய நாள்.

மிதுனம்:

குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சியான நாள்.

கடகம்:

நினைத்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவது நல்லது. சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அனுகூலமான நாள்.

சிம்மம்:

வியாபர பணிகளில் புதிய முதலீடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.  ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

கன்னி:

நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வியாபார பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும். கீர்த்திகள் நிறைந்த நாள்.

துலாம்:

ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். பங்காளிகள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.முயற்சிகள் மேம்படும் நாள்.

விருச்சிகம்:

வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில பணிகள் திருப்திகரமாக இருந்தாலும் சில அலைச்சல்களும் உண்டாகும். மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

தனுசு:

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உதவிகள் கிடைக்கும் நாள்.

மகரம்:

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், அதற்குண்டான ஆதரவான வாய்ப்புகளும் ஏற்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்:

மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.  பெருமை ஏற்படும் நாள். 

மீனம்:

புதிய தொழில் நுட்ப கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். உயர்வான நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 nov rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->