இன்றைய (17-10-2022) ராசி பலன்கள்.. இன்றைய தினம் யாருக்கு வெற்றி..? யாருக்கு மகிழ்ச்சி.? - Seithipunal
Seithipunal


மேஷம்

எழுத்து சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

பேச்சு திறமையின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் பொருளாதார உதவி கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பழக்கவழக்கம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கூட்டு வியாபார பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.

கடகம்

எண்ணிய சில பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான இடமாற்றம் சாதகமாகும். மனதில் புதிய தெளிவு உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

சிம்மம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். விவசாய பணிகளில் பாசன வசதிகள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சாதகமாக அமையும். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

கன்னி

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். கால்நடைகளின் மீதான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

துலாம்

தந்தை வழியில் ஆதரவான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். திருத்தலம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

விருச்சிகம்

வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். செய்கின்ற செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் சில மாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். சிலருக்கு மறைமுகமான தனவரவு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும். விரயம் நிறைந்த நாள்.

தனுசு

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். விளையாட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய காரியத்தை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.

கும்பம்

பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

மீனம்

பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் லாபம் மேம்படும். கால்நடை சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17.10.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->